Breaking News

அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்திய புலமை ஒலி 2026 சிலப்பதிகார விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிபன் ஜெயச்சந்திர மூர்த்தி தலைமையில் அல்லையம் பதி வடிவேலர் மண்டபத்தில் இடம்பெற்றது.


அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்திய புலமை ஒலி 2026 சிலப்பதிகார விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் பாராளுமன்ற உறுப்பினர் ரஜிபன் ஜெயச்சந்திர மூர்த்தி தலைமையில் அல்லையம் பதி வடிவேலர் மண்டபத்தில் இடம்பெற்றது



இதில் முதல் நிகழ்வாக வரவேற்பு நடனமும், அதனைத் தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன. மங்கல சுடர்களை தொழிலதிபர்களான திரு திருமதி பஞ்சலிங்கம் மலைமகள், திரு திருமதி சண்முகநாதன் ரதி தம்பதியினர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து கடவுள் வாழ்த்தினை யாழ் இந்த கல்லூரி ஆசிரியர் கந்தசாமி ராஜீவன் நிகழ்த்தினார்.

வரவேற்புரையினை செல்வன் ஜெ.ஜெயசங்கர் நிகழ்த்தினார். 


தலைமையுரையினை நிகழ்வின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நிகழ்ந்தினார். முதன்மை விருந்தினர் உரையினை தமிழ்நாடு விஜிபி குழுமத் தலைவர் கலைமாமணி செவிலியர் முனைவர் பிஜி சந்தோசம் நிகழ்த்தினார்.  

நிறைவுறையினை இளங்கோ கழக உறுப்பினர் பேராசான் நா.சிவலிங்கம் நிகழ்த்தினார்.


அதனைத் தொடர்ந்து மன்னார் வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. பூபாலசிங்கம் அவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தார் 

தொடர்ந்து தமிழ் அமுதம் இசை நிகழ்வும், கம்ப பாரதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் வழக்காடு மன்றமும் இடம்பெற்றது. வாதிகளாக பேராசிரியர் சிறி பிரசாந்தன், விரிவுரையாளர் மேல் நந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதிவாதிகளாக வலம்புரி விஜயசுந்தரம், ம. கோசலை ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், பிரதேச மக்கள், தென்னிந்திய புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த 12ம் தேதி ஆரம்பித்த சிலப்பதிகார விழா நேற்று மூன்றாளில் இனிதே நிறைவுற்றது