Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக அருளுரை..!

 சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக அருளுரை..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு 

செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த திருவிழாவின் 08ம் நாளான இன்று சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்,

“கந்தபுராணம் காட்டும் வாழ்வியல் ” என்ற தலைப்பில் ஆன்மீக அருளுரையினை சைவப்புலவர் ச.முகுந்தன் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இதேவேளை 05ம்திருவிழா நாளான கடந்த புதன்கிழமை “முருகன் திருவருள் ” என்ற தலைப்பில் ஆன்மீக

அருளுரையினை, திரு ஜெ.துஷாந்தன் அவர்களும்

06ம் நாள் திருவிழாவான கடந்த வியாழக்கிழமை 


“உதித்தனன் உலகம் உய்ய ” என்ற தலைப்பில் ஆன்மீக

அருளுரையினை, உப அதிபர் இ.கிருஷ்ணராஜ் அவர்களும், இடம்பெற்றன.