Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கெக்கிராவ பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை

 சந்நிதியான் ஆச்சிரமத்தால் 

கெக்கிராவ பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பாவை




யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு 

சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்,

அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேச நிர்வாகப் பகுதியில் அமைந்துள்ள நேயகம பிள்ளையார் ஆலயத்தில் திருவெம்பா கால விசேட பூசை வழிபாடுகள் இன்று .

வியாழக்கிழமை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில், இடம்பெற்றது.


பெரும்பான்மை இன மக்கள் அதிகளவில் வாழ்கின்ற குறித்த பிரதேசத்தில் சைவ மக்களின் வழிபாட்டிற்காக குறித்த ஆலயம்

சந்நிதியான் ஆச்சிரமத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது.


திருவெம்பாவை இன்றைய தினம் ஆரம்பமாகிய நிலையில் திருவாசகம் ஒதுதல் மற்றும் சிறப்பு பூசைகள் இடம் பெற்றன

இன்றைய விசேட வழிபாடுகளில் கொக்கிராவ பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்

டனர்