Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக நாதஸ்வரக் கச்சேரி..!

 சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக நாதஸ்வரக் கச்சேரி..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் இடம் பெறும் வாராந்த நிகழ்வு 

ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இதில் நாதமணி மதுசூதனன் வேல் நாதம்" நாதஸ்வரக் கச்சேரி இடம் பெற்றது.


கீபோட் இசையினை இசைக்கலைமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும், 

ஒக்டபாட் இசையினை வித்துவான் அ.கேதீஸ் அவர்களும், தபேலா இசையினை வித்துவான் மகேந்திரம் பிரபா அவர்களும் இசைத்தனர்.


இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இதேவேளை நுவரெலியா - கெட்டபுலா நடுப்பிரிவு, கெட்டபுலா பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக, 

ஆலயத்திற்கான வர்ணம் பூசுவதற்காக 600,000 ரூபா பெறுமதியான தீந்தை வகைகள் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டு வர்ணப்பூச்சுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.


பதுளை - ஹாலி எல ஶ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தின் கட்டுமானப் பணிக்காக ஆலய நிர்வாகத்திடம் 75,000 ரூபா நிதியும் நேற்று முன்துனம் வழங்கப்பட்டது.


இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்

.