Breaking News

இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் களுத்துறை இளைஞர்களால் கிளிநொச்சி பளை பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் .......!



இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் களுத்துறை இளைஞர்களால் கிளிநொச்சி பளை பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் .......!



தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நட பெற்று வரும் இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் யுவதிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர் 


வருகை தந்த இளைஞர் யுவதிகளால் இன்றய தினம் மாலை 3:30 மணியளவில் மாசார் சந்தியில் இருந்து மாசார் பாடசாலை சுமார் 300 மரக்கன்றுகள் நடும் செயல் திட்டம் மேற் கொள்ளப்ட்டது 



இவ் மர நடுகை நிகழ்வில் களுத்துறை இளைஞர் யுவதிகள் தமிழர் கலாசார உடைகளுடன் குறித்த பணியினை மேற்கொண்டனர் 





இவ் இளைஞர் யுவதிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்க படவுள்ளதாகவும் குறிப்பாக கலை கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் உணவுப்பழக்கம் மற்றும் சமய வழிபாடுகள் திட்டம் இடபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர் 


இவ் மர நடுகை நிகழ்வானது மாசார் மக்களின் நிதியுதவியுடன் இடம்பெற்றதுடன் இவ் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் மாசார் கிராம அலுவலர் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் சுஜீபன் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்