Breaking News

49வது தேசிய விளையாட்டு விழாவில் கடினப்பந்தில் மூன்றாம் இடத்தினை பெற்ற வடமாகாண அணி வீரர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு

 49வது தேசிய விளையாட்டு விழாவில் கடினப்பந்தில் மூன்றாம் இடத்தினை பெற்ற வடமாகாண அணி வீரர்களுக்கு கிளிநொச்சியில் அமோக வரவேற்பு




இலங்கையின் 49வது தேசிய விளையாட்டு விழாவுக்கான தேசிய போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் வரலாற்றில் முதல்தடவையாக வடமாகாண அணி மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. 

குறித்த வடமாகாண அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த வீரர்கள் 12பேரும், யாழ் மாவட்டத்தைச்சேர்ந்த 02வீரர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 01வீரரும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.

குறித்த வீரர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து மத்திய கல்லூரி வரை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.