Breaking News

தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!

 தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..!



பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கற்பிட்டி, கண்டல்குடா 90 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.