தொடர் விசாரணைகள் மற்றும் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலின் மத்தியில் மக்கள் பணிக்காக தேர்தலில் விதூசிகன்.......!
தொடர் விசாரணைகள் மற்றும் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலின் மத்தியில் மக்கள் பணிக்காக தேர்தலில் விதூசிகன்.......!
எதிர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் முகாவில் வட்டாரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தொடர் விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பின் தொடர்புகள் மற்றும் இனந் தெரியாத நபர்களின் தாக்குதலின் மத்தியிலும் மக்கள் பணிக்காக தேர்தலில் களம் காணும் விதூசிகன் எனும் சமூக செயற்பாட்டாளர்
இச் பிண்ணனி தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
விதூசிகன் எனும் நபர் கடந்த காலத்தில் நில அபகரிப்பு மற்றும் தமிழ் தேசிய இருப்பு கருதியும் பல ஆர்ப்பாட்டங்களை முன் நின்று நடத்தி உள்ளார்
அதன் தொடர்ச்சியாக இவர் அண்மைக்காலமாக தொடர் விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு கொழும்பு வரை தொடர்ச்சியாக விசாரணைக்கு சென்று வந்துள்ளார்
அது மட்டுமின்றி புலனாய்வு துறையினர் தம்மை cid என அடையாள படுத்தி அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடரும் தன்மையும் அண்மைக்காலமாக அதிகரித்து வந்துள்ளது
அதன் தொடர்ச்சியாக இவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இனந்தெரியாத நபர்களால் விபத்துக்கு உள்படுத்தி நீண்ட கால சிகிச்சையின் பின்னர் சுகம் பெற்று மக்கள் மத்தியில் பணியாற்ற வந்துள்ளார்
இதன் தொடர்ச்சியாக ஊரில் உள்ள பொது அமைப்புகளின் வேண்டு கோளுக்கு இணங்க முழு நேர மக்கள் பணிக்காகவும் தனது அடக்கு முறையில் இருந்து ஒரளவு வெளியே வருவதற்காகவும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் முகாவில் வட்டாரத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளராக களம் காண உள்ளார்


