கனடாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த தயாராகிறது ஆஸி..!
கனடாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த தயாராகிறது ஆஸி..!
கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரியில் தனது பிரதமர் பதவியை
ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். இதனையடுத்து லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி வெற்றிபெற்றார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து கனடா பொருளாதார மற்றும் அரசியல் பதட்டங்களை எதிர்கொண்டு வரும் காலகட்டத்தில் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பிரதமராக தேர்வான பின்னர் கார்னி ஆற்றிய வெற்றி உரையில், “டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமலில்தான் இருக்கும்.” என்று உறுதிபட தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார்.
அதேவேளை, கனடாவின் புதிய பிரதமருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கனடா பிரதமருக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்