Breaking News

பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டத்தில் களமிறங்கிய மானிப்பாய் பிரதேச சபை!

 பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டத்தில் களமிறங்கிய மானிப்பாய் பிரதேச சபை!



பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கடந்த சபை அமர்வில், உறுப்பினர் வாகீசன் முன்வைத்த பாதீனியம் ஒழிப்பு தொடர்பான பிரேரணையானது தீர்மானமாக்கப்பட்டது. அந்தவகையில் அதன் ஆரம்ப வேலைத்திட்டம் இன்றையதினம் உயரப்புலம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது வெட்டப்பட்ட பாதீனியமானது வேறு இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்காக அந்த இடத்திலேயே போட்டு தீவைத்து எரிக்கப்பட்டது.


இதில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர், உப தஸிசாளர், உறுப்பினர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோர் இணைந்து கொ

ண்டனர்.