மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை ஒத்திவைப்பு..!
மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை ஒத்திவைப்பு..!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (26.03.2026) மன்னார் நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
