Breaking News

கிளிநொச்சியில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான கலந்துரையாடல்....!

 கிளிநொச்சியில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான கலந்துரையாடல்....!




புதிய சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் DR ரவீந்திர காரியவசம் தலைமையில் நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்,மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள்,சுற்றுச்சூழல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ,வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ,சுற்றுச்சூழல் தொடர்பான திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.