Breaking News

கிளிநொச்சியில் 78வது சுதந்திர தின நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது


கிளிநொச்சியில் 78வது சுதந்திர தின நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. வடமாகாண மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.



குறித்த நிழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 


தமிழ், சிங்கள, ஸ்லாமிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைகளால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன நல்லிணக்கம், சமாதானத்தினை வெளிப்படுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.


தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்கள், சர்வமதத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


கலர் மீ எனும் தலைப்பில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.