Breaking News

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு..!

 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு..! 


2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2026) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.



தொடர்ந்து வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

  

இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும் பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.


இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி),பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர்,ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.