ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இடம் பெற்ற பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு....!
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இடம் பெற்ற பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு....!
கடந்த (28.12.2025) பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்ற வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார்
குறித்த இளைஞன் உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் எனும் பிரபல உதைபந்தாட்ட வீரர் என்பவரே ஆவார்
குறித்த வீரரை 28 மற்றும் 29 திகதி முழுவதும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் பொது மக்கள் என பலரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்
அதன் தொடர்ச்சியாக இரு நாட்கள் கடந்து நேற்றைய தினம் அதிகாலை குறித்த சடலமாக சடலமாக கரை ஒதுங்கினார்
கரை ஒதுங்கிய பிரபல உதைபந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு இன்றைய தினம் காலை 8 மணியளவில் அவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டடு இறுதி சடங்குக்காக உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைக்கப்பட்டது
இவ் இறுதி சடங்கில் இலங்கை முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் வருகை தந்து குறித்த விளையாட்டு வீரருக்கு இறுதி சடங்கு செலுத்தினர்
பின்னர் பாரதி விளையாட்டுக்கழகத்தின் சீருடை வீரனுக்கு வழங்கப்பட்டது அதைனை தொடர்ந்து உதைபந்தாட்ட காலணியும் வைக்கப்பட்டு இறுதி சடங்கு இடம் பெற்றது
