தட்டுவன் கொட்டி கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..!
தட்டுவன் கொட்டி கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தட்டுவன் கொட்டி கிராமத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை இன்றைய தினம்(02.12.2025)மேற்கொண்டிருந்தனர்.
டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்கி மீள தமது வீடுகளுக்கு திரும்பிய மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள்,
அடிப்படைச் வசதிகளை உறுதி செய்தல் மற்றும் தமது வீட்டு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
தொடர்ந்து வெள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த இக் கிராமத்தின் பிரதான வீதியின் பாதிப்புக்களை பார்வையிட்டனர். இராணுவத்தினரின் உதவியுடன் அங்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த பணிகளின் வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது.
இக் களவிஜயத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன்,கிளிநொச்சி 55ம் படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் மற்றும் இராணுவ அதிகாரிகள்,கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் A.M.R.N.K அழககோன் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்புச் செயலாளர் மோகன், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
