Breaking News

கடலில் காணமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்பு....!யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம்

 கடலில் காணமல் போன பிரபல உதைபந்தாட்ட வீரர் சடலமாக மீட்பு....!யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம் 




யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார் 


குறித்த சம்பவம் ஆனது 


நேற்றைய முன் தினம் (28.12.2025) பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார்.


கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞன் உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் எனும் பிரபல உதைபந்தாட்ட வீரர் என்பவரே ஆவார்


குறித்த இளைஞனை நேற்றும் மற்றும் நேற்றைய முன் தினம் முழுவதும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் பொது மக்கள் என பலரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர் 


அதன் தொடர்ச்சியாக இரு நாட்கள் கடந்து இன்றய தினம் அதிகாலை குறித்த இளைஞன் சடலமாக கரை ஒது

ங்கியுள்ளார்