துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவெட்டு வெளியீடு
துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவெட்டு வெளியீடு
கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவெட்டு இன்று வெளியிடப்பட்டது
நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் யெ,யெமில் அவர்களின் வரிகளிலும் மைக்கல் சார்ள்ஸ் அவர்களின் இசையிலும் Jmic studio வின் ஒலிப்பதிவிலும் பாடகர்களாக யே.றெஜி,றா.விஜி,யோ.பிரியங்கா,செ.செபஸ்ரியன் ஆகியோரின் குரலிலும் பதிவாகிய துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவெட்டு வெளியிடப்பட்டது
கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் இறுவெட்டை வெளியிட்டு வைக்க ஆழிப்பேரையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்
