வடமராட்சி கிழக்கில் இடம் பெறும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் நடவடிக்கை...! NPP அமைப்பாளர் சாம்
வடமராட்சி கிழக்கில் இடம் பெறும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் நடவடிக்கை...! NPP அமைப்பாளர் சாம்
வடமராட்சி கிழக்கில் இடம் பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, மற்றும் சட்டவிரோத கடற்றொழில்கள் மீது மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் சாம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் மண் கொள்ளை பகலிரவாக இடம் பெறுகின்றமை, சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருமின்றமை தொடர்பாக ஏன் Npp அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்தும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஊடகவியலாளர்கள் ஏழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திரு.சாம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அரச இயந்திரம் அதாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுவதாகவும், நடவடிக்கை எடுக்கவேண்டிய. அதிகாரிகள் பலர் அதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்றும், அவர்கள் மிக விரைவில் அகற்றப்பட்டதும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர்கள் மிக விரைவில் அகற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்ததுடன் மாவீரர் தொடர்பில் தமது அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் நல்ல தீர்மானம் எடுத்திருப்பதாகவும், இதனால் மக்கள் அச்சமின்றி இறந்தவர்களை நினைவு கூருவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
