இனங்களுக்கிடையில் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமாகவிருந்தால் மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும்...! சி.வேந்தன்.
இனங்களுக்கிடையில் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமாகவிருந்தால் மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும்...! சி.வேந்தன்.
நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் இன்று வடமராட்சி கிழக்கில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது
கார்த்திகை மாதம் என்பது தேச விடுதலைக்காக தமது இன் உயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூறுகின்ற மாதம்.
அந்தவகையிலே கார்த்திகை 21 தொடங்கம் 27 ம் திகதிவரை மாவீரர் வாரமாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசமெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வருட மாவீரர் நினைவேந்தல் சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் அந்தந்த நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் இடம் பெறுவதற்க்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
தாயகத்திலே ஒரு சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் அகன்றிருக்கின்றனர். கணிசமான மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ முகாம்கள் உள்ளன.
இதனால் ஒவ்வொரு வருடமும் தமது பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நினைவேந்தல் செய்வதற்கு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அந்தவகையிலே இந்தவருடமும் மாவீரர் வாரத்தை சிறப்பாக அனுஸ்டிப்பதற்கு எஞ்சியிருக்கின்ற மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி ஒரு தேசிய நல்லிணக்கத்தோடு, விட்டுக்கொடுப்போடு இந்த வருடமும் மாவீரர்களை நினைவேந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கௌரவ கடற்றொழில் அமைச்சர் ஒரு அறிவித்தலை விடுத்திருக்கின்றார். அதாவது மாவீரர் துயிலுமில்லங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான உத்தரவை ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளருக்கு கொடுத்திருக்கின்றார்.எதிர்வரும் காலங்களில் மக்கள் சுதந்திரமாக மாவீரர்களை நினைவேந்தல் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியிருக்கின்றார்.
நாங்கள் அந்த கருத்தை வரவேற்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இது பேச்சளவிலே இல்லாமல் செயலளவிலே இருக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
மாவீரர் பெற்றோர்கள், உறவினர்கள், உரித்துடையோர் எல்லோரும் இந்த துயிலுமில்லங்களுக்கு அருகிலேதான் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களை கடந்து செல்கின்றபோது வலிகளோடும் வேதனைகளோடும்தான் கடந்து செல்கின்றனர்.
ஆகவே போரின்மீது ஒரு சமாதானத்தை கொண்டுவந்துள்ளோம் என்று கூறிவருகின்ற அரசாங்கம் மக்களது வேதனைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தங்களது பிள்ளைகளது கல்லறைகளிலே தான் இராணுவம் ஏறி இருக்கினறது
என்ற மன வேதனையுடன்தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறுனில் ஒரு தேசிய நல்லிணக்கம் வருவதற்குரிய வாய்ப்பே இல்லை. ஆகவே ஒரு இனம் இன்னொரு இனத்தின் மவீர்களது கல்லறைமீது ஏறியிருப்பது என்பது தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும்.
நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்
று செல்லவேண்டும்.
