கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து, ரிப்பர் சேதம்..!
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து, ரிப்பர் சேதம்..!
கிளி
நொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் சற்றுமுன்னர் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
மாடு ஒன்று வீதிக்கு குறுக்காக சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஒன்று மாட்டில் மோது பேருந்து விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்க்காக வேகத்தை குறைத்து பேருந்தை நிறுத்தியுள்ளது.
அப்போது பின்னால், சென்றுகொண்டிருந்த படி ரக வாகனம் பேருந்தில் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்க்காக தனது வாகனத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.
இதன் போது பின்னால் சென்றுகொண்டிருந்த ரிப்பர் வேக கட்டுப்பாட்டை இழந்து படி ரக வாகனத்துடன் மோதியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
