புதிய சந்தைக்கு தற்காலிக பூட்டு, தவிசாளர் அதிரடி..!
புதிய சந்தைக்கு தற்காலிக பூட்டு, தவிசாளர் அதிரடி..!
பரு
த்தித்துறை நகரசபையின் புதிய சந்தை இன்று மதியம் 12 மணியுடன் மூடப்பட்டுள்ளது.
புதிய சந்தையில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நேற்றைய தினம் வியாபாரிகள் பருத்தித்துறை நகரிலுள்ள நவீன சந்தை தொகுதிக்கு சென்றிருந்த நிலையில் நேற்று பருத்தித்துறை தவிசாளர் தலமையில் 8 நகரசபை உறுப்பினர்களுடன் பருத்தித்துறை வர்த்தகர்களும் இடையில் அவசர கூட்டம் நடாத்தப்பட்டது. அதில் வர்த்தகர்கள் புதிய சந்தைக்கு சென்று வியாபாரம் செய்யமாட்டோம் என விடாப்பிடியாக நின்ற நிலையில் இன்று மதியம் 12 மணியுடன் புதிய சந்தையை மழை காலம் முடியும்வரை தற்காலிகமாக நவீன சந்தை தொகுதியில் இயங்கவுள்ளது.
இதேவேளை யாராவது தமது வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வியாபாரிகள் மண்ணெண்ணெயுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
