யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் சந்தேகநபர் கைது!
பூ.லின்ரன்
யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் சந்தேகநபர் கைது!
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டடி - கண்ணாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 2 கிலோ 790 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவாவும், 50 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
