முகமாலையில் எறிகணைகள் மீட்பு..!
பூ.லின்ரன்
செய்தியாளர்
முகமாலையில் எறிகணைகள் மீட்பு..!
கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிபஹபதற்க்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் காணப்பட்டுள்ளது. அதனை அவதானித்த மக்கள் கிராம சேவகர் ஊடக உரிய தரப்புக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற சிறப்பு அதிரடி படையினர் குறித்த எறிகணைகளை அழிப்பதற்கு ஏடுத்துச்சென்றுள்னர். குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்று
ள்ளது.
