மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு...!
மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு...!
யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் இன்றய தினம் மதியம் 1:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்படையினரால் உடனடியாக பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட கைக் குண்டினை கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்