Breaking News

இளைஞர்களுக்கான அரசியல் பன்முகத்தன்மை மற்றும் டிஜிட்டல் செயல்வாதம் செயலமர்வு மிக வெற்றிகரமாக நிறைவு பெற்றது

இளைஞர்களுக்கான அரசியல் பன்முகத்தன்மை மற்றும் டிஜிட்டல் செயல்வாதம் செயலமர்வு மிக வெற்றிகரமாக நிறைவு பெற்றது



 

கிளிநொச்சி, இலங்கை – ஆகஸ்ட் 03, 2025 ஐரோப்பிய யூனியனின் நிதிப்பங்களிப்பில், Sri Lanka Unites அமைப்பின் வழியாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றமான அரசியல் பன்முகத்தன்மை பயிற்சி (Advance Political Pluralism Training - APPT) கடந்த ஒரு வருடமாக நடைப்பெற்று வந்தது. அதன் இறுதி நிகழ்வாக ஆகஸ்ட் 03 அன்று கிளிநொச்சியில் Sri lanka Unites வடமாகாண நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.


இந்த பயிற்சி வடமாகாணத்தைச் சேர்ந்த 20 இளைஞர்களை அரசியல் விழிப்புணர்வு, ஜனநாயக பங்கேற்பு மற்றும் மனித உரிமை கற்றல் போன்ற துறைகளில் திறமையுடன் உருவாக்கியது.


பயிற்சியில் கற்பிக்கப்பட்ட முக்கிய விடயங்களாக இலங்கையில் தேர்தல் முறையும் சட்டச் சட்டங்களும் மற்றும் தேர்தல் செயன்முறையில் பொதுமக்களின் பங்கேற்பும், தேர்தல் தகவல்களை அணுகும் உரிமையும் மற்றும் அடிப்படை உரிமைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் நிழ்நிலைசார் பாலியல் மற்றும் பால்நிலை அரசியல் வன்முறை மற்றும் புறக்கணிப்புகள் மற்றும் தகவல்களை அணுகும் சுதந்திரமும், தேர்தல் தெளிவுத்தன்மையும் மற்றும் டிஜிட்டல் செயல்வாதம் (Digital Activism) என்பன தெளிவூட்டப்பட்டது.