Breaking News

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு.....!

 யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு.....!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது 


இச் சுற்றி வளைப்பில் 38பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது 


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்