வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசு கு.சுரேந்திரன் தெரிவு...!
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசு கு.சுரேந்திரன் தெரிவு...!
யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன்
செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலமையில் இடம் பெற்ற நிகழ்வில்
இலங்கை தமிழரசு கட்சிக்கு 13, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 4, ஆசனங்களும், தேசிய மக்கள் சக்திக்கு 6 ஆசனங்களும், Epdp 2, உள்ளடங்கலாக மொத்தம் 32 ஆசனங்கள் கொண்ட சபையில் தவிசாளர் தெரிவு இரகசியமாகவா அல்லது பகிரங்க வாக்கெடுப்பதா என வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இதில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என வாக்களிக்கப்பட்ட நிலையில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு தவிசாளர் உப தவிசாளர் தெரிவு என தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவிசாளருக்காக கு.சுரேந்திரன், அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் தம்பையா சிவராசா ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
தம்பையா சிவராசாவிற்கு
இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கு. சுரேந்திரன் அவர்கள் 13. வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட த.சிவராசா அவர்கள் 12. வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.
இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அதன் தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.ரங்கேஸ்வரன் உட்பட பல அரசியல் கட்சி பிரமுகர் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தனர். இதில் 7 உறுப்பினர்கள் வாக்களி
க்க இல்லை.