Breaking News

யாழ்பயபாணம் வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகம் வடமராட்சி கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் மற்றும் கயிறுழுத்தல் சுற்றுப் போட்டிகளில் பெண்கள் அணியினர் இரண்டிலும் திக்கம் அணி சம்பியனாகி சாதனை படைத்துள்ளது


யாழ்பயபாணம் வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகம் வடமராட்சி கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் மற்றும் கயிறுழுத்தல் சுற்றுப் போட்டிகளில் பெண்கள் அணியினர் இரண்டிலும் திக்கம் அணி சம்பியனாகி சாதனை படைத்துள்ளது 



வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பெண்கள் A அணியும், கயிறுழுத்தல் சுற்றுப் போட்டியில் பெண்கள் B அணியும் சம்பியனாகின.

குறித்த வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 30 கழகங்கள் பங்குபற்றியிருந்தன. 


கயிறுழுத்தல் இறுதிப் போட்டி துன்னாலை வல்லியானந்தம் எதிர் பருத்தித்துறை மலையான் சாண்டோ அணி மோதியது. இதில் துன்னாலை வல்லியானந்தா சம்பியனானது.


குறித்த நிகழ்வு மைக்கல் விளையாட்டுக்கழக மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி தாட்சாயினி பிறேம்நாத் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள், கேடயங்கள், பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கபந்துகொண்ட முன்னாள் பாராளுமன்று உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர்களான பளை மத்திய கல்லூரி ஆசிரியர் இ.ரகீசன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சதீஸ் ராஜசிங்கம், நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் கனகராசா நிசாந்தன், சமூக சேவையாளர் கமலாகரன் அனந்தன், கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வருகை விரிவுரையாளர் திருமதி சாயினி சிறிரகுராம், முல்லைத்தீவு மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தாட்சாயினி பிரவீன், மாகாண கல்வித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் துஸ்யந்தினி ராகவேந்தர், உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர்.


இந்நிகழ்வில் வடமராட்சிக்குட்பட்ட விளையாட்டு கழகங்களின் வீரர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டு போட்டிகளைக் கண்டுரசித்தனர்.