போதை பொருட்களுடன் நால்வர் கைது..!
போதை பொருட்களுடன் நால்வர் கைது..!
50 கிராம் ஹெரோயின் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் கஞ்ஞா நான்கு
போதை மாத்திரைகளுடன் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் தனபால , யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க , யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா ,உதவி பொலிஸ் அத்தியட்சகர் டில்றுக் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கமைவாக சுன்னாகம் பொலிஸ் நிலையஸனஸ பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி கலுமினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு க்களின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
இதன்படி 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயின் 25 வயதான இளைஞர் ஒருவரும் 4 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்களும் , 5 கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் நால்வரை கைது செய்தனர் .
கைது செய்யப்பட்ட நால்வருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்