பருத்தித்துறை நகரசபை தவிசாளராக வின்சன் தீபோல் டக்ளஸ் போல் தெரிவு..!
பருத்தித்துறை நகரசபை தவிசாளராக வின்சன் தீபோல் டக்ளஸ் போல் தெரிவு..!
பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றார்.
ஜீவநந்தினி பாபு தலமையில் இடம் பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவர் முன்மொழியப்பட்டிருந்தநநர்.
8 பகிரங்கம், ரகசியம் ,5, நடுநிலை 2
இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு பரான்சிஸ் ரட்ணகுமார் வெளிநடப்பு செய்தார், மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
அதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. இதில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதில் பருத்தித்துறை நகரசபை செயலாலலர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கெஎ சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி யாழ்மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்