அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா!
அராலி நீ
ளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா!
அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் வேள்வித் திருவிழாவானது நேற்றையதினம் (25) சிறப்பாக நடைபெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளியாக வீற்றிருந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆலயக் ஆலயத்தின் வேள்வித் திருவிழா கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர். பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.