இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்ற 84 வேட்பாளர்களின் சத்தியபிரமாண விழா 10.06.2025 அன்று அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்ற 84 வேட்பாளர்களின் சத்தியபிரமாண விழா 10.06.2025 அன்று அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவரான இ.சாணக்கியன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான உள்ளூராட்சி மன்ற உரிமைகளும் அதன் பொறுப்புக்களும் பொது மக்களுக்கான கடமைகளை முன்னெடுத்தலும் தொடர்பான விளக்க உரைகள் இங்கு கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கருத்துக்கள்வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இ. ஸ்ரீநாத், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்பு உள்ளூராட்சி சபைகளுக்குரிய சத்திய பிரமாண நிகழ்வும் கட்சியின் சத்தியபிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.