Breaking News

அரங்கேரியது மரியசீலன் நாட்டுக் கூத்து...!

அரங்கேரியது மரியசீலன் நாட்டுக் கூத்து...!



யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில் நேற்றைய (26) தினம் வடமோடி நாட்டுக்கூத்தான மரியசீலன் நாட்டுக் கூத்து அரங்கேற்றப்பட்டது 


இவ் நாட்டுக் கூத்தானது வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக நேற்றைய தினம் மாலை 8மணியளவில் ஆலய முன்றலில் அமைந்துள்ள சென் பிலிப் நேரிஸ் கலையரங்கத்தில் சென் பிலிப் நேரிஸ் கலாமன்றத்தினால் அண்ணாவியார் றோக்கு. யூட்சன்செபசிங்ரன் (சூட்டா) அவர்களின் நெறிப்படுத்தலில் அரங்கேற்றப்பட்டது 


இவ் நாட்டுக் கூத்தில் வடமராட்சி கிழக்கில் புகழ்பூத்த நாட்டுக் கூத்து கலைஞர்கள் பலரும் வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் என பலரும் நடித்து தமது திறமையை வெளிப்படுத்திக் கொண்டனர் 


இக் கூத்தினை கண்டு கழிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்து பார்வையிட்டு கலைஞர்களை பாராட்டி சென்றதை காணக்கூடியதாக இருந்தது