முதியோர் கொடுப்பணவு தர முடியாது என திரத்தி விட்ட அஞ்சல் உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பில் பரபரப்பு
முதியோர் கொடுப்பணவு தர முடியாது என திரத்தி விட்ட அஞ்சல் உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பில் பரபரப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பணவு எடுக்க சென்ற முதியோர் ஒருவரை கொடுப்பணவு தர முடியாது என திரத்தி விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று (14) காலை முதியோர் கொடுப்பணவு எடுக்க சென்ற முதியவர் கொடுப்பனவுக்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலக காவல் இருந்த நிலையில் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரை நேரம் செல்லுது என்னை மிக விரைவாக அனுப்பும் வடி கேட்ட போது அங்கு நின்ற முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரும் மற்றும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான நபர் அந்த முதியோரை தமக்கு வாக்கு போட இல்லை என பேசி உள்ளார்
இதனை அடுத்து அந்த நபர் தற்போது அஞ்சல் அலுவலக உத்தியோகத்தராக இருக்கும் நபரிடம் சென்று முதியவருக்கு கொடுப்பணவு கொடுக்க வேண்டாம் என கூறி சென்றுள்ளார்
இதன் பின் தற்போது உத்தியோகத்தராக இருக்கும் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்ற குறித்த முதியவரை பல கீழ்த்தரமான வாத்தைகளை பயன்படுத்தி பேசியும் முதியோர் கொடுப்பணவு அட்டையினை தூக்கி எறிந்து தனது சுயநல கோபத்தினை வெளிப்படுத்தி உள்ளார் அஞ்சல் உத்தியோகத்தர்
ரூபா 250ற்காக 2km பயணம் செய்து வந்த முதியவர் தனது வாக்கினை குறித்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரருக்கு போடவில்லை என அவமானப்படுத்தி அனுப்பி சென்ற சம்பவம் தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவெடிக்கை எடுக்கப்போது? இவ்வாறே தொடர்ந்து நடை பெற விடப்போதா? என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்