Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது 



சம்மாந்துறை , நாவிதன்வெளி , இறக்காமம் பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செலுத்தியது.


2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை , நாவிதன்வெளி , இறக்காமம் பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் இன்று (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.


இதன் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு செயலாளர் அஸாறுடீன் சலீம் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ரிசாட் ஆகியோர் பங்குபற்றி

னர்.