Breaking News

பாடகி தன்சிகாவிற்கு உடுத்துறையில் கெளரவிப்பு



பாடகி தன்சிகாவிற்கு உடுத்துறையில் கெளரவிப்பு



கிளிநொச்சியில் இடம் பெற்ற காலக் குரல் பாடல் போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த மாணவி ஜெ.தன்சிகாவிற்கான பாராட்டு விழா நேற்றைய தினம் (15)

உடுத்துறை பாரதி விளையாட்டு கழக பொதுமண்டபத்தில் முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார், கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்ற பாடகி மாணவி தன்சிகா கௌரவிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் மற்றும், அருட்தந்தை.வசந்தன் அடிகளார் ஆகியோர் இணைந்து மாணவிக்கு நிதி அன்பளிப்பினையும் வழங்கியிருந்தனர்.


கௌரவிப்பு நிகழ்வில் மாணவியின் பெற்றோர், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்