உடுவில் மகளிர் கல்லூரியின் வருடந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது இன்றையதினம் நடைபெற்றது.
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது இன்றையதினம் நடைபெற்றது.
ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு விளையாட்டு போட்டி ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து அடிப்படை, சுவட்டு நிகழ்ச்சிகள், இடைவேளை நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரைகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
கல்லூரியின் முதல்வர் மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் உதவி பணிப்பாளர் குமாரசூரியர் செந்தில்குமரன் கலந்து சிறப்பித்துடன் ஏனைய விருந்தினர்கள், பிரதி அதிபர், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர் - ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்
டனர்.
