Breaking News

கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட அவகாசம், பருத்தி துறை பிரதேச சபை தீர்மானம்..!



கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட அவகாசம், பருத்தி துறை பிரதேச சபை தீர்மானம்..!



பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுக்தீஸ் தலமையில் காலை 9:30 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.

இதில் சபையின் நிதி நடவடிக்கைக்கான அனுமதிகள் சபையிடம் பெறப்பட்டது. வட்டார அலுவலர்களுக்கான 20 வீத கொடுப்பனவுகள் வழங்குவதற்கான அனுமதி தொடர்பில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் சபையிடம் நிதி இல்லை என்றும் அதனை உரிய தரப்புக்கு அறிவிவிப்பது என்றும், கட்டிட அனுமதி பெறப்படாமல் கட்டிடங்கள் கட்டியோருக்கு அதற்கான வியாபார அனுமதி வழங்க வேண்டாம் என்று ஆளுநரிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டமையால் ஒருவருடத்திற்குள் கட்டிட அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், மருதங்கேணி பகுதியில் சபை அனுமதி இன்றி தனியார் நிதி நிறுவனம் ஓன்று இயங்குவதாகவும் அதனை ஆய்வு செய்து சபையால் நடவடிக்கை எடுப்பது என்றும் பல்வேறு தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.