Breaking News

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது..!

 சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது..!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு செம்பியன்பற்று தாளையடி பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து 


மருதங்கேணி பொலிசார் இவ் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு பல முயற்சிகளை மேற் கொண்டு வந்தனர் 


அதன் தொடர்ச்சியாக குடாரப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற டிப்பர் ஒன்று மீட்கப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் மருதங்கேணி போலீசாரால் நேற்றிரவு 8:00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.




கைப்பற்றப்பட்ட டிப்பரையும் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மருதங்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்நுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற

ன.