சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஞானச்சுடர் 334 வது மலர் வெளியீடு
சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஞானச்சுடர் 334 வது மலர் வெளியீடு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் மாதாந்த ஆன்மீக மலரான ஞானச்சுடர் 334 வது மலர் வெளியீட்டு நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில் வெளியீட்டுரையினை ஆசிரியர் துரைகணேசமூர்த்தி அவர்களும், மதிப்பீட்டுரையினை
சைவப்புலவரும், சமய பாட ஆலோசகருமான செ.கந்த சத்தியதாசன் அவர்களும் நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்
தனர்.
