Breaking News

இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்.....!

இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்.....!



செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குளுக்கானதும நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய தினம் பளை நகர பகுதியில் பலத்த வரவேற்பின் மத்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இன்றய தினமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது வருகிறது 


இவ் கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர் ஈஸ்வரன் டாயாளினி மற்றும் சுபாஸ்கரன் சுஜீபா அவர்களும் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன் மற்றும் பொதுமக்கள் மற்றும் சகோதர மொழியினத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.