Breaking News

80 லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்கள் கைது


80 லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்கள் கைது 




தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேர சட்ட விரோத கசிப்பு உற்பத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்ட தருமபுர போலீசாரக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 04.08.2025 அன்றைய தினம் மாலை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள்

இருவர் தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக புளியம்பொக்கனைப் பகுதியில் சந்தேக நபர்கள் பேருந்தில் கசிப்பினை கொண்டு செல்ல முற்பட்ட பொழுது கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபரிடம் இருந்து 30 லிற்றர் கசிப்பினையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் 


அத்துடன் 05.08.2025 அன்றைய தினமும் தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பெரியகுளம் கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50 லீற்றர் கசிப்பு 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக தெரிவித்துள்ளார்