முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்துசெல்லும் அபாயம், இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது, மீள பயன்படுத்துமாறும் கோரிக்கை..!
முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்துசெல்லும் அபாயம், இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது, மீள பயன்படுத்துமாறும் கோரிக்கை..!
அம்பன் பிரதேசம் கடந்தகால முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்துசெல்லும் அபாயம், இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது, மீள பயன்படுத்துமாறும் கோரிக்கை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த காலங்களில் முறைற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதனால் நல்லூர் ஆலயத்திற்க்கு கூட இனிமேல் மணல் மண் விநியோகிக்கமுடியாதென்று பருத்தித்துறை பிரதேச செயலர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தாம் நல்லூர் ஆலயத்திற்கு மணல் மண் வழங்குவதற்கு எதிரானவர் அல்ல என்றும், கொட்டோடை கிராமம் கடந்தகால முறையற்ற மணல் அகழ்வினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய சூழல் பாதிப்பு காரணமாகவே மக்கள் நல்லூரான் ஆலயத்திற்கு மணல் மண் வழங்க மறுத்ததாகவும் தெரிவித்தார். இதேவேளை அம்பன் கொட்டோடை வீதி பயன்படுத்துவதற்க்கான அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பாக கேட்டபோது தமது சபைக்கு சொந்தமான வீதி மணல் மண் ஏற்றிச்சென்றால் சேதமடையும் வீதிக்கான இழப்பீட்டை பெறுவதற்க்காகவே தான் அனுமதி கொடுத்ததாகவும், மணல் மண் ஏற்றுவதற்க்கு தான் எதிரானவன் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த அம்பன் கொட்டோடை வீதியானது கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரதேச சபையால் தடைசெய்யப்பட்ட வீதி என்பது குறிப்பிட த
க்கது.