Breaking News

மூன்று நாட்களாக காணமல் போன குடும்ப பெண் மக்களின் உதவி கேட்டு நிற்கும் கணவர்....!


மூன்று நாட்களாக காணமல் போன குடும்ப பெண் மக்களின் உதவி கேட்டு நிற்கும் கணவர்....!



யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்றய முன் தினத்தில் இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார் இந்த பெண்ணை கண்டு பிடிக்க உதவும் மாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர் 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


கடந்த 29ம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண் இரவு 11மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்தவுடன் குடும்ப பெண்ணை காணவில்லை அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார் அங்கும் பெண் போக வில்லை இதன் பின் பதற்றம் அடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர் 


இதனை தொடர்ந்து காணமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தமது தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் 


இன்றுடன் குறித்த பெண் காணமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பம் கேட்டு நிற்கின்றனர்