தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!
தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!
மாணவர்களிடையே சமய அறிவையும் அதன் மூலம் ஒழுக்கநெறியையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோசவத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்படும் சமய அறிவுப்போட்டி இம் முறையும் நடைபெற்றுள்ளது. அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை தீர்த்தோற்சவம் அன்று (14.07.2025) ஆலய முன்றலில் இடம்பெற்றது.
தரம் 3 தொடக்கம் 11 வரை பயிலுகின்ற 226 மாணவர்கள் எழுத்துமூலப் பரீட்சையில் தோற்றியிருந்தார்கள் இவர்களில் 127 பேர் பரிசுக்குரியவர்களாகக் தெரிவுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
யா/ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிசன் வித்தியாலயத்தில் தரம் 3 பயிலும் செல்வன் தர்மேந்திரா தனோசியன் 95 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இப் பதக்கம் அமரர் சி. பொன்னுத்துரை, அமரர் பொ. தங்கமாணிக்கம் ஆகியோர் ஆகி ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எந்திரி ச. சர்வராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
ஆலய பிரதமகுரு விக்னராஜா சர்மா அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் பரீட்சைக்குழு சார்பாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், ஆனைப்பந்தி அமெரிக்கன் மிசன் பாடசாலை அதிபர் யோ.ஜெக ஆனந்தம் ஆகியோர் பங்கேற்றிருந்
தார்கள்.