Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இன்னிசையும், உதவிகளும்..!


சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக இன்னிசையும், உதவிகளும்..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு சந்நிதியான் 

ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நேற்று காலை இடம்பெற்றது. 


பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் நுண்கலைமாணி ச. ஜெயதர்சி

அவர்களின் இறை இசைக் கச்சேரி இடம் பெற்றது. இதில் 

கீபோட் இசையினை இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும், 

மிருதங்கம் இசையினை இசைக்கலாமணி வ.ரமணசர்மா அவர்களும், 

தபேலா இசையினை தபேலா வித்துவான் M. பிரபா ஆகியோர் வழங்கினர்.


புலோலி, பருத்தித்துறையை சேர்ந்த வட இந்து மகளிர் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்று கற்றல் நடவடிக்கைக்காக வழங்இவைக்கப்பட்டதுடன் 

தெல்லிப்பளை, சித்தியம்புளியடி கலைச்செல்வி சனசமூக நிலையத்தின் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிக்கான நிதியும், மாணவர்களுக்கான சீருடைக்கான நிதியுமாக 60,000 ரூபா வழங்கிவைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சி

றப்பித்தனர்.