Breaking News

சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக சுழிபுரம் பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக சுழிபுரம் பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.



வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்திலேயே பொதுமகன் ஒருவரால் இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டது. அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,


சுழிபுரம் கடல் இறங்குதுறையானது அண்மையில் ஆழப்படுத்தப்பட்டது. இதன் போது அங்கு பெறப்பட்ட மண்ணை எமது பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு போட்டு வெள்ளம் தேங்காமல் செய்வதற்கு அனுமதி கோரினோம். இருந்தாலும் எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் கரையோர பகுதி இராணுவத்திற்கு அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 


எங்களது பகுதிகளில் உள்ள எத்தனையோ வீதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. பொருளாதார அய்விருத்தி உத்தியோகத்தர் கூட எத்தனை தடவை வெள்ளத்துக்குள் வந்து பார்வையிட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாங்கள் அந்த மண்ணை எடுப்பதற்கு அனுமதி இருந்தோம்.


குறைந்தது 13 அல்லது 14 வீதிகள் இவ்வாறு காணப்படுகின்றன. எமது மக்களின் பாவனைக்கு அந்த மண்ணை அதிகாரிகள் வழங்காததற்கான காரணம் என்ன என அவர் கேள்வி எழுப்பி

யுள்ளார்.