பண்டிதர் பரந்தாமனின் இழப்புக்கு இரங்கல் செய்தி தெரிவிக்கும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்
பண்டிதர் பரந்தாமனின் இழப்புக்கு இரங்கல் செய்தி தெரிவிக்கும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்...!
தாய் மொழிக்காகவும் தேச விடுதலைக்காகவும் அரும்பாடுபட்ட
உன்னத மனிதரை இழந்துவிட்டோம்.
பண்டிதர் பரந்தாமன் 2009 முற்பட்ட காலங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர், தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து
பற்றுறுதியுடன் பணியாற்றி ஓய்ந்து கிடக்கும் ஓர் உன்னதமான
தமிழாற்றலோனை ஒரு பாடலாசிரியனை நினைந்துருகுகின்றோம் .
தன் வாழ்நாளை தேசத்தின் பணிக்காகவே நெஞ்சில் நிறுத்தி கடமை
செய்து உயர்ந்து நிற்கின்றார் பண்டிதர் ஐயா அவர்கள். 1942ல் இம் மண்ணில் பிறந்து தன் இறுதி மூச்சுவரை அம் மண்ணிலேயே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
தமிழ் மொழியில் ஆழமான புலமை பெற்ற மனிதன் என்பதற்கு அப்பால் தமிழ் மொழியையே தெய்வமாக தொழுதவர்.
அவரது எழுத்து ஆற்றலினால் விடுதலைப்பாதை உயிர் மூச்சுப் பெற்றது.
எனவே தன் வாழ்நாள் இறுதிவரை தன் தாயக மண்ணில் வாழ்ந்து
மடிந்து விடுதலைக் கனவோடு செல்லும் மகான் பண்டிதர்
ஐயாவுக்கு எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்