Breaking News

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது. 




37உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 06உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 04உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 02உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 02உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக 01உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பாக 02உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.கரைச்சி பிரதேச சபையை தமிழரசுக்கட்சி பெரும்பாண்மை ஆசனங்களைக்கொண்டு கரைச்சி பிரதேச சபையை ஆட்சியமைத்தது.தவிசாளராக அருணாச்சலம் வேழமாலிகிதன் அவர்களும் உபதவிசாளராக புஸ்பநாதன் சிவகுமார் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி வெளிவந்திருந்தது. இன்றைய முதல் கன்னியமர்வில் உறுப்பினர்களின் அறிமுக உரை மற்றும் கன்னி உரைகள் இடம்பெற்றன